ஆப்நகரம்

குரங்கணி காட்டுத்தீ: அரசுக்கு கமல் பாராட்டு

குரங்கணி காட்டுத்தீயில் உயிர்களை காப்பாற்றும் அரசின் முயற்சிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2018, 5:08 pm
குரங்கணி காட்டுத்தீயில் உயிர்களை காப்பாற்றும் அரசின் முயற்சிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal haasan appreciates kurangani fire rescue operation
குரங்கணி காட்டுத்தீ: அரசுக்கு கமல் பாராட்டு


தேனி அருகே குரங்கணியில் மூண்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். அவர்களில் 7 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணியை பாராட்டவே விரும்புகிறேன். மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார்.

நான் சொல்லும் சில விஷயங்கள் திரிந்து சொல்லப்படுகின்றன என்ற அவர் படவாய்ப்பு குறைந்ததால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என கூறப்படுவதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி