ஆப்நகரம்

அடுத்த முதல்வருக்கு வண்டி ஓட்டும் ஓட்டுநரே; கமல் சென்ற பேருந்தில் கலகலப்பு!

நாகை: கமல் ஹாசன் சென்ற பேருந்தில் ஓட்டுநரை புகழ்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Dec 2018, 8:04 am
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகள், உடைமைகள், கால்நடைகள், விவசாய நிலங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை இழந்து தவிக்கின்றனர்.
Samayam Tamil Kamal1


அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ குழுக்கள் உதவி செய்து வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு நேர்ந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அங்குள்ள கிராமம் ஒன்றில் இருந்து, அரசு பேருந்தில் கமல் பயணித்தார். அப்போது நடத்துநரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார்.

பின்னர் ஓட்டுநர் அருகே சென்று, அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார். அப்போது பேசிய ஓட்டுநர், ’நீங்கள் என் வண்டியில் வருவதால் தான் பாதுகாப்புடன் வருகிறீர்கள்’ என்று கமலிடம் கூறியுள்ளார்.

இதனால் பயணிகள் அனைவரும் கலகலப்பாகினர். அப்போது பயணி ஒருவர், ’நீங்கள் அடுத்த சி.எம்க்கு வண்டி ஓட்றிங்க’ என்று ஓட்டுநரை பாராட்டினர். இதைக் கேட்ட கமலும், பிற பயணிகளும் சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி