ஆப்நகரம்

இந்திய அரசியலுக்கே ஒளிதரும் சின்னம்: டுவீட் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த கமல்

இந்திய அரசியலுக்கு ஒளிதரப்போகும் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நடிகர் கமல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Mar 2019, 2:32 pm
இந்திய அரசியலுக்கு ஒளிதரப்போகும் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நடிகர் கமல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal-haasan-7592


இந்திய தேர்தல் ஆணையம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு ’பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட டுவிட்டில் கூறியிருப்பதாவது ‘ மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’’ என்று தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல் கூறுகையில் ‘ தேர்தல் ஆணையம் எங்களுக்கு சரியான சின்னத்தை வழங்கியிருக்கிறது. எந்த தொகுதிகளில் போட்டியிடப்போகிறோம் என்பதை விரைவில் அறிவிப்போம். நீங்கள் யாரை பற்றி கேட்கிறீர்கள் என்று தெளிவாகச் சொன்னால்தான் பதில் அளிக்க முடியும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகள் பற்றி எனக்கு கருத்தில்லை. வேண்டுமானால் அவர்களுக்கு நோட்டாவின் சின்னத்தை வழங்கலாம்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி