ஆப்நகரம்

டார்ச்லைட் விஷயத்துக்கே அவர் இப்பதான் வராரு: மோடியை கிண்டல் செய்யும் கமல்

மக்கள் நீதி மய்யம் என்றைக்கோ கையில் எடுத்த டார்ச்லைட் விஷயத்துக்கே, பிரதமர் மோடி இன்றுதான் வந்துள்ளார் என்று நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையை கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2020, 12:13 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த இருவாரங்களில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று மூன்றாவது முறையாக உரையாற்றியுள்ளார்.
Samayam Tamil khpm


இன்றைய அவரது பேச்சின் முக்கிய அம்சமாக, "கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களது ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், நாளை மறுநாள் (ஏப்ரல் 5) இரவு 9 மணியளவில் நாட்டு மக்கள் அனைவரும் 9 நிமிடங்கள் தங்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு அல்லது செல்ஃபோன் டார்ச் மூலம் தங்களது வீடுகளை ஒளிர செய்ய வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'நாடே அல்லோல படுது'... அத விட்டுட்டு விளக்காம், டார்ச் லைட்டாம்..! கருணாஸ் எம்எல்ஏ காட்டம்!

அதில், "பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என நிறைய எதிர்பார்த்தேன்.

ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்" என்று தமது ட்விட்டர் பதிவில் கமல் ஹாசன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி