ஆப்நகரம்

சசிகலாவுக்கு அமைச்சர் பதவி? என்ன சொல்கிறார் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 Dec 2020, 11:27 am
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். . 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதேசமயம், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலையை (டிடி) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சசிகலா செலுத்திய அபராதத் தொகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில், “ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் ஆண்களும் இரண்டரை ஆண்டுகள் பெண்களும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்” என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு முதல்வர் பதவியில் பங்கு? ஓ.பி.எஸ்., புதுக்குண்டு!

இதையடுத்து, ஓபிஎஸ் தெரிவித்த கருத்து அரசியல் அரங்கில் பெரும் விவாதத்துக்குள்ளானது. அவரது கருத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், எடப்பாடி பழனிசாமியின் இமேஜ்ஜை உடைக்கும் வகையில் ஓபிஎஸ் பேசியிருக்கலாம் என்றும், சசிகலா தரப்பை அரவணைத்து அவருக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கலாம் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

தமிழக பள்ளிகள் திறப்பில் உருவான புதிய சிக்கல்!

அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை” என்று சாடியுள்ளார்.


மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை” என்று சசிகலாவின் விடுதலையை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சசிகலா விடுதலையும் வெள்ளை கொடி காட்டும் தினகரனும்: என்ன நடக்கிறது அமமுகவில்?

முன்னதாக, தலைநிமிரட்டும் தமிழகம் என்ற பெயரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முதல்கட்டமாக மதுரையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி