ஆப்நகரம்

திருச்சி உஷா குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய கமல்ஹாசன்!

திருச்சியில் டிராபிக் போலீஸ் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா குடும்பத்தாருக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.

Samayam Tamil 4 Apr 2018, 5:42 pm
திருச்சியில் டிராபிக் போலீஸ் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா குடும்பத்தாருக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.
Samayam Tamil உஷாவின் கணவருக்கு ஆறுதல் கூறும் கமல்ஹாசன்!
உஷாவின் கணவருக்கு ஆறுதல் கூறும் கமல்ஹாசன்!


திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்த உஷா என்ற பெண், கணவருடன் பைக்கில் சென்றபோது, இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்நதாக கூறப்பட்டதால் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உஷாவின் தாய் லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்!


இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் தின விழாவில், உஷாவின் குடும்பத்தாருக்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற கமல்ஹாசன், உஷா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.

உஷாவின் அம்மா லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு 5 லட்ச ரூபாய், உஷாவின் கணவர் ராஜாவுக்கு 5 லட்ச ரூபாய் என 10 லட்ச ரூபாயைப் பிரித்து வழங்கி உள்ளார் கமல்ஹாசன்.

அடுத்த செய்தி