ஆப்நகரம்

கல்லூரிகளில் பேச கமலுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு!

கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே பேசுவதற்கு தடை விதித்து, தமிழக அரசு கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்புவதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 2 Mar 2019, 10:33 am
கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே பேசுவதற்கு தடை விதித்து, தமிழக அரசு கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்புவதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Samayam Tamil கல்லூரிகளில் பேச கமலுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு!
கல்லூரிகளில் பேச கமலுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு!


சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு மேடையில் பேசிய கமலஹாசன், நமது விமானப்படை விமானியை பாகிஸ்தான் விடுவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். இதற்காக அண்டை நாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுவதற்கு தமிழக அரசு தடை விதிப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பதாகவும் கமலஹாசன் குற்றஞ்சாட்டினார்.

அடுத்த செய்தி