ஆப்நகரம்

அமைச்சரவையை மாற்றுவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம் – ஓ.பன்னீா் செல்வம்

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பது என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 30 Aug 2018, 10:49 am
தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பது என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil O Panneer Selvam


தமிழக துணைமுதல்வா், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா் செல்வம் மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிஸ்கட்சியின் தலைவா் திருநாவுக்கரசா் கூறுகிறாா். அவரது பகல் கனவுக்கு பதில் அளிக்க முடியாது.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தா்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்றாா். மேலும் இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு, கமல்ஹாசனின் பேச்சு விநாடிக்கு விநாடி மாறக்கூடியது. அவரது பேச்சுக்கும் பதில் அளிக்க முடியாது.

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பது என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் யாரும் தலையிட முடியாது. டிடிவி தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ வாய்ப்பில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தோ்தலுக்கான பூா்வாங்க பணிகளை தொடங்கி விட்டோம். தோ்தல் அறிவித்தவுடன் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி