ஆப்நகரம்

விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்: கமல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்ப்பதாக என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2018, 1:42 pm
பெட்ரோல் விலை குறையவில்லை, உயர்ந்து கொண்டு தான் இருப்பதாகவும், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்ப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
Samayam Tamil vijay kamal


சென்னை விமானநிலையத்தில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார்: அப்போது அவர் பேசியதாவது: 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆய்வுக்குழுவிடம் மனு அளிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை. அதற்காக தொழிற்சாலையே தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை. மக்களுக்கு தீங்கும் விளைவிக்கும் தொழிற்சாலை தான் தேவையில்லை. தொழிற்சாலை என்பது மக்களுக்கும் லாபம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி ஒருவரின் லாபத்துக்காக இருக்கக் கூடாது

பெட்ரோல், டீசல் விலை குறைந்து விட்டதாக சொல்லாதீர்கள். பெட்ரோல், டீசலின் விலையை மொத்தமாக ஏற்றி விட்டு கொஞ்சாமாக குறைப்பது என்பது நியாயமில்லை. அதன் விலை ஏறிக் கொண்டு தான் இருக்கிறது என்பதன் பொருள். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்'.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி