ஆப்நகரம்

கர்நாடக தேர்தல் தான் காரணமா? மோடிக்கு கமல் கேள்வி

நீதி வேண்டி போராடி வரும் தமிழகத்திற்கு நீதி கிடைத்தாகி விட்டது அதை செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை என பிரதமர் மோடியை குறிப்பிட்டு நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 11:58 am
நீதி வேண்டி போராடி வரும் தமிழகத்திற்கு நீதி கிடைத்தாகி விட்டது அதை செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை என பிரதமர் மோடியை குறிப்பிட்டு நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil KAMAL_TWEET
காவிரி மேலாண்மை வாரியம்- மோடிக்கு கமல் ட்விட்டரில் கோரிக்கை


பாதுக்காப்பு துறை சார்பில் சென்னை திருவிடந்தையில் நடைபெற்று வரும் 4 நாட்கள் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


நீதிக்காக போராடும் தமிழக மக்களின் நிலை பிரதமர் மோடி அறியாததல்ல. நீதி கிடைத்தாகி விட்டது அதை செயல்படுத்த வேண்டியது பிரதமராகிய உங்களின் கடமை என்று கமல்ஹாசன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கர்நாடாக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதிக்கப்படுகிறது என தமிழக மக்கள் நம்பத்தொடங்கிவிட்டனர். இது ஆபத்தானது, அபாயகரமானது என கமல்ஹாசம் மேலும் கூறியுள்ளார்.

தமிழக மக்கள், விவசாயிகள், கர்நாடக மக்களுக்கு நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியரசு அமைத்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ள அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி