ஆப்நகரம்

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு என்னை கூப்பிடல; கமல் ஆதங்கம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து வரும் நிலையில், தன்னை கூட்டத்துக்கு அழைத்தால் செல்லத் தயாராக இருப்பதாக மதுரையில் நடிகர் கமல் பேட்டியளி்த்தார்.

Samayam Tamil 22 Feb 2018, 12:24 pm
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து வரும் நிலையில், தன்னை கூட்டத்துக்கு அழைத்தால் செல்லத் தயாராக இருப்பதாக மதுரையில் நடிகர் கமல் பேட்டியளி்த்தார்.
Samayam Tamil kamal request to attend all party meeting on cauvery verdict issue
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு என்னை கூப்பிடல; கமல் ஆதங்கம்


மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், எனவே காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு தன்னை அழைத்தால் நலம் என்றும் தெரிவித்தார்.

மேலும், மதுரையில் இருந்து சென்னைக்கும் வரும் கமல், கூட்டத்துக்கு அழைக்கவில்லை என்றால் மீண்டும் திரும்பி விடுவதாகவும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டாலின், சீமான், வைகோ உள்ளிட்ட 30 கட்சித்தலைவர்கள், 14 விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி