ஆப்நகரம்

மாணவர்களை அடக்கினால் போராட்டம் தீ போல் பரவும்: கமல்

மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க அது இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 6:47 pm
மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க அது இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 1500x500


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு முடிந்த பிறகும் மத்திய அரசு அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடை பெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்தின் போட்டோக்கள் சில சமூக வலைத்தளங்ளில் வைரலாகின. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் யார் என்பதை அந்தப் படங்களின் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், "காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்று கூறினார். "மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க அது இன்னும் பரவும்" என்றும் அவர் எச்சரித்தார்.

அடுத்த செய்தி