ஆப்நகரம்

‘சுப்ரீம் கோர்ட், பிளீஸ் வழக்க தள்ளுபடி பண்ணுங்க’: கமல்!

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 மீது பதியப்பட்டுள்ள தேசதுரோக வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2019, 4:31 pm
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் நாட்டில் மத ரீதியாக நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இந்த கடிதம் அனுப்பப்பட்டதுக்காக, பீகார் மிஜாப்பூர் உயர்நீதிமன்றம் தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
Samayam Tamil _21bce0da-b76e-11e9-a203-e6c4ad816de5


இதையடுத்து, மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49பேர் மீது தேசதுரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 49 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டரில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் நினைக்கிறார். இதுகுறித்து அவர் பாராளுமன்றத்திலும் பேசி இருக்கிறார். ஒற்றுமையை நிலைநாட்ட நாட்டின் சட்டம் உருவாக்க முனைய வேண்டாமா? பிரதமரின் மரியாதையைக் குறைக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளனர் என எனது நண்பர்கள் 49 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. பீகாரில் பதியப்பட்டுள்ள இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாட்டின் குடிமகனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி