ஆப்நகரம்

"மயிரளவுகூட பயமில்ல": விட்டாருப்பா அடுத்த வீடியோவ கமல்!

திராவிடக் கட்சிகள் அரவேக்காடு.. அடிமைகளாக வாழும் மக்கள்... சுபஸ்ரீ மரணம்.. அறிவே இல்லையா..??

Samayam Tamil 20 Sep 2019, 2:28 pm
உலக நாயகன் என்ற போர்வையில் நடிகராக வலம் வந்த கமல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை மதுரையில் வைத்துத் தொடங்கினார். மையம் என்ற வார்த்தையை மய்யம் என மாற்றிக் கொண்டு தான் எப்போதும் மையத்தில் நின்று அரசியல் செய்வேன் எனக் கூறிவந்த கமல், தனது கருத்தில் சில காலம்கூட தாக்குப்பிடிக்க முடியாமல், ஆட்சியாளர்களையும், முன்பு ஆட்சியிலிருந்தவர்களையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்.
Samayam Tamil KH_1


கமல் பெரும்பாலும், பத்திரிக்கை மற்றும் டிவி நியூஸ் சேணல்களை நேரடியாகச் சந்தித்து பேட்டி அளிப்பதில்லை. மாறாக, அவ்வப்போது தனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வைத்து சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து கருத்து ஒன்றை வெளியிடுகிறார். பெரும்பாலும் கமல் சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களையே தனது வீடியோக்களில் பேசி வருகிறார். இந்நிலையில், கமல் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல் கூறியது:

உலகத்தில் மிகக் கொடுமையான செய்தி என்பது, வாழவேண்டிய பிள்ளைகளின் இறப்புச் செய்தியை அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவிப்பதுதான். சுபஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படிதான். வாழ வேண்டிய பிள்ளையின் ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதைப் பார்த்தால், பெற்றோருக்கு மட்டுமல்ல சம்பவத்தைப் பார்க்கும் அனைவருக்கும் மரண பயம் வரும்.

பெண்ணைப் பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இப்படி அரசோட அஜாக்கரதையால, பல ரகுக்களும்(கோவையில் பேனர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்) சுபஸ்ரீக்களும் கொல்லப்பட்டுள்ளனர். கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?(அதிமுக) எங்க பேனர் வைக்கனும் வைக்கக்கூடாதுனு கூடவா உங்களுக்குத் தெரியாது?

இவர்களைப் போன்ற அலட்சியமான அதிகாரிகளாலும், அரவேக்காடு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படப் போகிறதோ? எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை ஏறி மிதிப்பதும். தப்பத் தட்டிக் கேட்டா நாக்க அறுப்பேனு சொல்வதும்தான் இவர்களுக்குத் தெரிந்த அரசியல். இதுபோன்ற அரசியல்வாதிகள் மீது மயிரிழை அளவுகூட எனக்குப் பயம் கிடையாது. ஒருவேலை உங்களுக்கு(மக்கள்) பயமிருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சார்பாக நாங்கள் அதைத் தட்டிக் கேட்டு அதற்கான தீர்வையும் பெற்றுத் தருவோம்.

எங்களை(மக்கள்) ஆட்சி செய்பவர்களை நாங்கள்தான் தேர்வு செய்வோம் எனக்கூறி அடிமைகளாக இருந்தால் அதைவிட பையித்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. அரசியல்வாதிகள் உங்களை சாதாரண மக்கள் எனச் சொல்லியே காலத்துக்கும் அடிமையாக வைத்துள்ளார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாகிறார்கள் என்பதைத் திண்ணமாக நான் நம்புகிறேன். வாருங்கள் நாளையை உருவாக்குவோம்.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோப் பதிவு வெளியான சில நிமிடங்களிலே, சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் சுபஸ்ரீயை வைத்தும் கமல் அரசியல்தான் செய்கிறார் என்றும் அதற்கு ஆதாரமாய், இவர் மக்களையும் திராவிடக் கட்சிகளையும் இழிவாகப் பேசும் கருத்துக்களையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். மற்றொரு தரப்பினர், இந்த வீடியோ சுபஸ்ரீ பெற்றோரைக் கட்சியில் சேரச் சொல்லி கமல் விட்டிருக்கும் அழைப்பு என்கிறார்கள்.

அடுத்த செய்தி