ஆப்நகரம்

வழிதவறிச் செல்கிறார் கமல்.. அடுத்து என்ன நடக்கும்? சொல்கிறார் செல்லூர் ராஜூ

நடிகர் கமல் வழிதவறிச் செல்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

TNN 12 Aug 2017, 5:49 pm
கோவை : நடிகர் கமல் வழிதவறிச் செல்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal was going in wrong route sellur raju
வழிதவறிச் செல்கிறார் கமல்.. அடுத்து என்ன நடக்கும்? சொல்கிறார் செல்லூர் ராஜூ


கோவை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளின் கூட்டம் கடந்த வாரம் சிறப்பாக நடந்தது. அனைத்து மாநிலத்தவரும் தமிழகத்தை பாராட்டினர். வருமானவரி கட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கி திமுக ஆட்சியில் சரியாக செயல்படவில்லை.

அதிமுக எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி. இரு அணிகள் விரைவில் சேரும். தடைகளை தாண்டி சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

அமைச்சர்கள் குறித்து தினகரன் தவறாக பேசினாலும் அவர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு முன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி ஆலோசித்து முடிவெடுப்பேன் என தெரிவித்தார்.


முக ஸ்டாலின் தினந்தோறும் பத்திர்க்கைகளில் இடம்பெறுவதற்காக, அவரின் தந்தையைப் போல அரசின் மீது குறைகூறிக் கொண்டிருக்கிறார்.
அதே போல கமல் ஒரு நல்ல நடிகர். அவர் தற்போது வழிதவறிச் சென்று கொண்டிருக்கிறார். விரைவில் அதை உணர்வார் என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி