ஆப்நகரம்

தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 6:19 pm
நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்!!
தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்!!


நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் நடந்த மாநாட்டில், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து, அவர் தனது கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பதிவ செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். இதில், எந்தக் கட்சியும் எவ்வித ஆட்சபனையும் தெரிவிக்காததால், தேர்தல் ஆணையம் கட்சியைப் பதிவுசெய்ய கமல்ஹாசனை நேரில் அழைத்தது.

இதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணைய இயக்குநர் சந்திர புஷன் குமாரை நேரில் சந்தித்து, நடிகர் கமல்ஹாசன் கட்சியைப் பதிவு செய்வதற்கான மனுவை அளித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சில ஆவணங்களைக் கேட்டுள்ளனர், அவற்றை இன்று மாலைக்குள் சமர்ப்பிப்போம். அவர்கள் கட்சிக்கு அங்கீகாரம் அளிப்போம் என உறுதியளித்துள்ளனர். நாங்கள் இன்னும் கட்சியின் சின்னம் குறித்து முடிவெடுக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சேலம்-சென்னை இடையேயான எட்டுவழி பசுமைச் சாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “சுற்றுச்சூழலைப் பற்றி கருத்து தெரிவிப்பது குற்றச் செயல் அல்ல. அதற்காக கடியாது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என கமல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி