ஆப்நகரம்

காமராஜர் சமத்துவ தச்சுத் தொழிலாளர் நலசங்கம் சார்பில் மே தின பேரணி

காவேரி பட்டினத்தில் காமராஜர் சமத்துவ தச்சு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட தச்சுத் தொழிளாளர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

Samayam Tamil 1 May 2019, 9:36 pm
காவேரி பட்டினத்தில் காமராஜர் சமத்துவ தச்சு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.
Samayam Tamil mayday33-550x445


இந்நிகழ்ச்சிகாவேரிப்பட்டிணத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது .முன்னதாக தச்சு தொழிலாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் தச்சு தொழில்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பொரு ளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார் பேரணி நகரின் முக்கிய வீதிகள் ஸ்ரீராமுலு நகர் , குலாளர் தெரு, பனகல் தெரு, பஸ் நிலையம் ,சேலம் மெயின் ரோடு, பாலக்காடு ரோடு வழியாக, மீண்டும் மாரியம்மன் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியல் அன்பு ஆதரவற்ற குழந்தை களுக்கு நோட்டுப் புத்த கங்கள், பேனா, பென்சில் ஆகியன வழங்கப்பட்டது .மற்றும் கெளரவ தலைவர் முருகேசன், காவேரி 150க்கும் மேற்பட்ட தச்சுத் தொழிளாளர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி