ஆப்நகரம்

பெற்ற மகளையே பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரன் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய கொடூரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Samayam Tamil 10 Dec 2018, 2:27 pm
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 4 வருடங்களாக பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய கொடூரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Samayam Tamil பெற்ற மகளையே பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரன் கைது!
பெற்ற மகளையே பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரன் கைது!


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தந்தை கடந்த 4 ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிசீரழித்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து நடத்திய விசாரணையில், 45 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ் ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். அப்பெண்னின் தந்தை, தனது மகள் என்றும் பாராமல் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்துள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்து இருக்கிறாள். மேலும் அந்த பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம் தாயையும், சகோதரனையும் கொன்றுவிடுவதாக கூறி அவரது தந்தை மிரட்டியுள்ளார். அப்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் 18 வயது பூர்த்தியடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தனது தந்தை மீண்டும் தன்னிடம் பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டதால் அப்பெண் தனது வீட்டிலிருந்து தப்பித்து பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே கடந்த சிலவாரங்களுக்கு அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவர தற்போது நான்காவது முறையாக கருக்கலைப்பு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தனியார் நிறுவனத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். தற்போது அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

அடுத்த செய்தி