ஆப்நகரம்

காஞ்சிபுரம்: போராட்டத்தில் ஈடுபட்ட 600 யமாஹா ஊழியர்கள் கைது!

ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து போராடிய 600 யமாஹா தொழிற்சாலை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 2 Oct 2018, 5:10 pm
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட யமாஹா நிறுவன ஊழியர்கள் 600 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil 28THMYOUNGSHIN


தொழிற்சங்கம் தொடங்கிய இரண்டு ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், மேலும் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரியும், யமாஹா இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 12 நாட்களாக நடந்து வந்த இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக, தொழிலாளர்கள் அனைவரும் இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது, அங்கே வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600 யமாஹா நிறுவன தொழிலாளர்களை கைது செய்தனர்.

அடுத்த செய்தி