ஆப்நகரம்

காஞ்சிபுரம்: 108 அவசர ஊர்தியிலேயே விவசாயிக்கு பிறந்த குழந்தை... பரபரப்புக்கு பின் சுவாரசியம்...

108 அவசர ஊர்தியில் இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 4 Nov 2019, 2:44 pm
காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரம் அடுத்த புத்தேரி பகுதியில் முரளி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயத் தொழில் செய்து வருபவர். இவரது மனைவி அபிராமி (23) . நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்தனர்.
Samayam Tamil kanchipuram women gave birth to a baby boy at 108 emergency ambulance
காஞ்சிபுரம்: 108 அவசர ஊர்தியிலேயே விவசாயிக்கு பிறந்த குழந்தை... பரபரப்புக்கு பின் சுவாரசியம்...


இதனையடுத்து புத்தேரி கிராமத்துக்கு விரைந்து வந்த 108 அவசர ஊர்தி ஊழியர்கள், அபிராமியை ஏற்றி கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது வரும் வழியிலேயே அபிராமிக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது.

சுபஸ்ரீ இறந்தும் திருந்தாத நபர்கள்; முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

இதனால் ஊவேரிசத்திரம் சந்திப்பில், 108 அவசர ஊர்தியின் மருத்துவ உதவியாளர் தினேஷ் மற்றும் பைலட் பாலாஜி அவர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதனையடுத்து அபிராமிக்கு சுகப்பிரசவத்தில் 2.5 கிலோ கிராம் எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் குழந்தையும் தாயும் பூரண நலத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 108 அவசர ஊர்தியில் பிரசவம் பார்த்த மருத்துவர் தினேஷ் மற்றும் பைலட் பாலாஜி ஆகியோர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பாலாற்றில் மரணக் குழிகள்... பறிபோன மூன்று உயிர்கள் !!

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்களை ஆம்புலன்சில் ஏற்றி செல்லும் போது, அவசரகால சிகிச்சை அளிப்பதற்கு கைதேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் உடன் இருப்பது அவசியம்.

இதன் முறையாகவே, ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததோடு, இரு உயிர்களையும் காப்பாற்றி உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த சம்பவம், மருத்துவ சேவைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

அடுத்த செய்தி