திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலையில், சற்று பின்னடைவு ஏற்பட்டு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதையடுத்து, அரசியல் பிரபலங்கள், தொண்டர்கள் என்று அனைவரும் மருத்துவமனையில் குவிந்தனர். இதன் காரணமாக மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையும் கருணாநிதி தொடர்பக அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், வயது முதிர்வில் அவரது உடல்நிலையை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Karunanidhi: கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது: குஷ்பு
தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு கருணாநிதியின் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு தான் கணிக்க முடியும் என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருணாநிதியின் உடல்நிலை கவனிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட முக ஸ்டாலின்
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையைச் சுற்றிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kauvery Hospital: இரவு 10 மணியளவில் மீண்டும் அறிக்கை வெளியிடும் காவேரி மருத்துவமனை..??
மேலும், மருத்துவமனையும் கருணாநிதி தொடர்பக அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், வயது முதிர்வில் அவரது உடல்நிலையை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Karunanidhi: கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது: குஷ்பு
தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு கருணாநிதியின் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு தான் கணிக்க முடியும் என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருணாநிதியின் உடல்நிலை கவனிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட முக ஸ்டாலின்
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையைச் சுற்றிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kauvery Hospital: இரவு 10 மணியளவில் மீண்டும் அறிக்கை வெளியிடும் காவேரி மருத்துவமனை..??