ஆப்நகரம்

கனிமொழியிடம் ஹிந்தியில் கேள்வி: விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு

திமுக எம்.பி. கனிமொழியிடம் ஹிந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க சிஐஎஸ்எஃப் உத்தரவு பிறப்பித்துள்ளது

Samayam Tamil 9 Aug 2020, 6:29 pm
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியிடம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியான மத்திய தொழிலக படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப் - CISF) ஒருவர் ஹிந்தியில் கேள்வி எழுப்பியதாக தெரிகிறாது. ஆனால், கனிமொழி தனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil கனிமொழி
கனிமொழி


அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியர் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து கனிமொழி, “இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என எப்போதிருந்த சட்டம் வந்தது” என அந்த பெண் அதிகாரியிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இதனை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, இந்தியராக இருப்பது ஹிந்தி பேசுவதற்குச் சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது என எனக்குத் தெரியவில்லை. ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா. ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர்கள் என்ற முடிவுக்கு எப்போது வந்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

நீ ஒரு இந்தியரா? கனிமொழியிடம், பெண் அதிகாரி கேள்வி!




இந்த நிலையில், கனிமொழியிடம் ஹிந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக எதுவும் கேட்கப்படுவதில்லை எனவும் சிஐஎஸ்எஃப் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய தொழிலக படைக்கு கனிமொழி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி