ஆப்நகரம்

மெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு காட்டியிருக்கலாம்: கனிமொழி

மெரினாவில் கலைஞரின் உடலை புதைக்க இடம் ஒதுக்குவதில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் விஷயத்தில் காட்டிருந்தால் தமிழக அரசு தோல்வி அடைந்திருக்காது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 10 Aug 2018, 6:08 pm
மெரினாவில் கலைஞரின் உடலை புதைக்க இடம் ஒதுக்குவதில்காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் விஷயத்தில் காட்டிருந்தால் தமிழக அரசுதோல்வி அடைந்திருக்காது என்று திமுக மாநிலங்களவைஉறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil kanimozhi_750


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிராந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் சுமார் 100 நாட்கள் போராடினர். போரட்டத்தின் 100 வது நாளில் பொதுமக்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனுகொடுக்க சென்றபோது , காவல்துறையினர் துப்பாக்கி சூசு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல சமூக ஆர்வலர்கள் , அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட்ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணைவெளியிட்டது . ஆனால் இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்வேதாந்தா குழுமம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டர்லைட்ஆலையில் நிர்வாகபராமரிப்பு பணிகளை மேட்கொள்ளலாம். ஆனால் உற்பத்தி பணிகள் மட்டும் மேற்கொள்ளக்கூடாது என்றுதீர்ப்பளித்தது.

இந்நிலையில்திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மெரினாவில் கலைஞரின் உடலை புதைக்க இடம் ஒதுக்குவதில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் விஷயத்தில் காட்டியிருந்தால் தமிழக அரசு தோல்வி நிகழ்ந்திருக்கிறாது.

அடுத்த செய்தி