ஆப்நகரம்

வீரமணியை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கனிமொழி

2 ஜி வழக்கில் விடுதலையாகிய எம். பி கனிமொழி இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்

TNN & Agencies 25 Dec 2017, 12:55 pm
2 ஜி வழக்கில் விடுதலையாகிய எம். பி கனிமொழி இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
Samayam Tamil kanimozhi meets k veeramani after 2g scam verdict
வீரமணியை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கனிமொழி


2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டின் மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை திமுகவினர் அதிகமாக எதிர்ப்பார்த்தனர் .

இந்த வழக்கில் கனிமொழி , ஆர். ராசா உற்பட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனிமொழி முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்று வருகிறார்.

இன்று அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

அடுத்த செய்தி