ஆப்நகரம்

மூணாறு நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களை சந்தித்து கனிமொழி ஆறுதல்..!

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தை கனிமொழி எம்பி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 25 Aug 2020, 7:31 pm
மூணாறு நிலச்சரிவில் பலியான கோவில்பட்டி அருகே கயத்தாறை சேர்ந்த தமிழர்களின் குடும்பத்தாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார் .
Samayam Tamil kanimozhi


கேரள மாநிலம் மூணாறு பெட்டிமுடி பகுதியில் கடந்த 6ம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பத்தாருக்கு இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஆறுதல் கூறினார். அவருடன் திமுக எம்எல்ஏவும் மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன், திமுக பொதுகுழு உறுப்பினர் ஜெகன் உடனிருந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மனுக்களை வழங்கினார்.


பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

அடேங்கப்பா... ஆறு மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை!!

முன்னதாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுமபத்தில் உள்ள நேரடி வாரிசு ஒருவருக்கு தலா 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அடுத்த செய்தி