ஆப்நகரம்

மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி., அவசர கடிதம்... விஷயம் இதுதான்!

மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குநர் அலுவலகத்தை, சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைக்கக்கூடாது என வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 20 Sep 2019, 8:25 pm
மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தத்துக்கான மண்டல இயக்குநர் அலுவலகத்தை, சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil kmpg


இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
“வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல இயக்குநர் அலுவலகத்தை, சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைக்க இருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கடிதம் தெரிவிக்கிறது.



இந்த அலுவலகம் மதுரையில் இருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான தொழில்முனைவோர்களின் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்ய முடிகிறது. தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொழில் விவகாரங்களுக்காக சென்னை மண்டல அலுவலகத்துக்கு அலைய வேண்டி அவசியம் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில், மதுரை மண்டல அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைக்கும் முடிவால் தென் மாவட்ட தொழில் முனைவோர்கள், குறிப்பாக எனது தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் தொழில் முனைவோர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாவார்கள்.

போதும் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... அசிங்கமா இருக்கு ... போலீசிடம் கதறிய பாஜக முன்னாள் அமைச்சர்!

ஏற்கெனவே அவர்கள் பல்வேறு இடர்களுக்கிடையில் தொழில் நடத்திவரும் நிலையில் மதுரை மண்டல அலுவலகம் சென்னைக்கு போவது அவர்களுக்கு மேலும் ஒரு இடையூறாக அமைந்துவிடும்.

தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் நீதித் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் திறக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் தற்போது இயங்கி வருகிறது என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

எனவே, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல இயக்குநர் அலுவலகத்தை மூடிவிட்டு , அதனை சென்னை அலுவலகத்துடன் இணைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழகத்தின் தென் மாவட்ட தொழில் முனைவோர்களின் நலன்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குநர் அலுவலகம் மதுரையில் தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டுமம் என்று கனிமொழி எம்.பி., தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி