ஆப்நகரம்

தீர்ப்பு நிம்மதி அளிக்கிறது : கனிமொழி

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டபட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து கனிமொழி, நீதியும், நியாயமும் வென்றுள்ளதாக கூறியுள்ளார்.

TNN 21 Dec 2017, 12:08 pm
2 ஜி வழக்கில் குற்றம் சாட்டபட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து கனிமொழி, நீதியும், நியாயமும் வென்றுள்ளதாக கூறியுள்ளார்.
Samayam Tamil kanimozhi says the 2g scam verdict give her peace
தீர்ப்பு நிம்மதி அளிக்கிறது : கனிமொழி


மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சமமந்தப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கனிமொழி கூறியிருப்பதாவது ‘இந்த வழக்கை திமுகவினர் பல ஆண்டுகளாக பொய்யான வழக்கு என்று கூறினர். அது தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு நியாயம், நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பு எனக்கு அதிக நிம்மதி அளிக்கிறது. இன்னும் அதிக உத்வேகத்துடன் அரசியலில் ஈடுபடுவேன். என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி