ஆப்நகரம்

என்னம்மா கனிமொழி எச்.ராஜாவை இப்படி பேசிப்புட்ட!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கருத்து தெரிவித்த எச்.ராஜாவிற்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 18 Apr 2018, 8:36 pm
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கருத்து தெரிவித்த எச்.ராஜாவிற்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
Samayam Tamil அவருக்குப் பதிலளித்து என்னை தரம் தாழ்த்த விரும்பவில்லை: எச்.ராஜாவுக்கு கனிமொழி பதிலடி!
அவருக்குப் பதிலளித்து என்னை தரம் தாழ்த்த விரும்பவில்லை: எச்.ராஜாவுக்கு கனிமொழி பதிலடி!


கடந்த சில தினங்களுக்கு முன், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டியதாக, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஆளுநர் பெயரும் அடிப்பட்டதால், செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் விளக்கமளித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின், கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளர் ஒருவரைப் பாராட்டும் விதமாக அவரது கன்னத்தில் ஆளுநர் செல்லமாக தட்டினார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண் பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் அதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் தனது டிவிட்டர் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,” “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என்று கனிமொழியை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எச்.ராஜாவின் கருத்திற்கு கனிமொழி பதிலளித்துள்ளார். அதில், “பாஜகவின் எச்.ராஜா அவர்களின் கருத்திற்கு பதிலளித்து என்னைத் தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. ஒரு பெண் இன்னொருபெண்ணுக்கு ஆதரவாக வந்தால் என்ன நடக்கும் என்பதை இது காட்டுகிறது. எல்லா துறைகளிலும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அரசியலில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.

இதனால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எனது கையில் எடுப்பத்தை நிறுத்தப் போவதில்லை” என்று கனிமொழி பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி