ஆப்நகரம்

வெள்ளத்தில் களமிறங்கிய எம்பி கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழைக் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களுக்கு உதவ...

Samayam Tamil 2 Nov 2019, 9:34 pm
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வந்தது. இந்த மழைக் காரணமாகத் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதுகுறித்து கேள்விப்பட்ட திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உடனடியாக களத்துக்குச் சென்று மீட்புப் பணியில் இறங்கியுள்ளார்.
Samayam Tamil kanimoli


அமித் ஷாவைப் பாராட்டிய கனிமொழி, திமுகவில் விரிசல் விரிவடைகிறதா..?

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கியார் புயல் அரபிக் கடலில் உருவானபோது, ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது வீசிய சூரைக்காற்றில் சிக்கி தூத்துக்குடி மீனவர்கள் 38 பேர் காணவில்லை. இந்த நிலை குறித்து அறிந்த கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து, மீனவர்கள் ஊர் திரும்பும் வரை அந்த பணிகளிலே கவனம் செலுத்தினார்.

முதல்வர் வீட்டு கிட்டயே அவ்வளோ குப்பைனா மத்த இடங்கள்ல.... நீதிபதிகள் வேதனை

சம்பந்தப்பட்ட மீனவர்கள் நேற்று ஊர் திரும்பியவுடன் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார். கனிமொழியின் இந்த நடவடிக்கைகளால், அவர் தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி