ஆப்நகரம்

கடல் சீற்றம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிய குமரி மாவட்டம்!

மீனவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பை ஏற்படுத்திய கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுவதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

Samayam Tamil 23 Apr 2018, 1:51 pm
மீனவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பை ஏற்படுத்திய கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுவதால்,அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
Samayam Tamil 30-1512034668-cyclone-ockhi-01


குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய பேரலையினால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அத்துடன் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கடல் தொடர்ந்து பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது.
கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற கடல் பகுதிகளில் 10 முதல் 15 அடி உயர அலைகள்எழும்பின இதனால் மீனவர்களின் கிராமங்கள் வெள்ளக்காடாகின.பல வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டது.மேலும் , தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் கடல் அலைகளில் அடித்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில்கடந்த இருதினங்களாக குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீனவ மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் கடல் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

அடுத்த செய்தி