குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய பேரலையினால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அத்துடன் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கடல் தொடர்ந்து பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில்கடந்த இருதினங்களாக குமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீனவ மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் கடல் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.