ஆப்நகரம்

கனமழையால் பெருகிய வெள்ளம்; கன்னியாகுமரி வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர், வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 16 Aug 2018, 2:59 pm
கன்னியாகுமரி: கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர், வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Samayam Tamil Kanyakumari.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெருஞ்சானி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து உபரிநீர் திறக்கப்பட்டது.

இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள ஏராளமான குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக குழித்துறை, மாங்காடு, முஞ்சிறை ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari floods enter inside houses.

அடுத்த செய்தி