ஆப்நகரம்

மாணவர்களை சேர்க்க முடியாது; அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியளித்த காரைக்குடி அரசுப் பள்ளி!

மாணவர்களை சேர்க்க இயலாத நிலையில் இருப்பதாக அரசுப் பள்ளி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Apr 2018, 12:15 pm
காரைக்குடி: மாணவர்களை சேர்க்க இயலாத நிலையில் இருப்பதாக அரசுப் பள்ளி தெரிவித்துள்ளது.
Samayam Tamil Karaikudi School
காரைக்குடி அரசுப் பள்ளி


காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

மாநில அரசின் தூய்மை விருந்தும் பெற்றுள்ளது. தற்போது அதிகப்படியான மாணவர்களால் போதிய கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இல்லை.

6ஆம் வகுப்பில் மட்டும் சேர 300க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மை குழு, மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 6ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் 50, தமிழ் வழியில் 35 மாணவர்கள் மட்டுமே சேர்க்க இடவசதி உண்டு.

பிற மாணவர்களை சேர்க்க இயலாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karaikudi Govt High School says no vacancy for students admission.

அடுத்த செய்தி