ஆப்நகரம்

காரைக்குடியை குறி வைத்த கனமழை... குடை வாங்கிடீங்களா...

வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களின் கனமழை பெய்து வருகிறது.

Samayam Tamil 27 Nov 2019, 5:52 pm
சிவகங்கை: வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் வானம் பார்த்த பூமிக்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Samayam Tamil காரைக்குடியை குறி வைத்த கனமழை... குடை வாங்கிடீங்களா...


இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

அந்த வரிசையில் காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

மக்களின் உயிரோடு பழனிசாமி அரசு விளையாடக் கூடாது: அமமுக தினகரன்!!

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர், கேளம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம் மற்றும் புறநகரங்களான அம்பத்தூர், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது தூரல் மழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி