ஆப்நகரம்

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ரஜினியின் கொடிதான் பறக்கும்.! - கராத்தே தியாகராஜன் பகீர்..!

தமிழகத்தில் 2021 -ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆட்சியை பிடிக்கலாம் என சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Sep 2019, 1:04 pm
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தற்போது அரசியல் விமர்சனங்களை தீயாக பரவிக்கொண்டு வருகிறார். பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சி செயல்பாடுகளையும் நேரடியாக சாடி வரும் இவர் ரஜினியின் அரசியல் வருகையை குறித்த முடிவுகளையும் பேசி வருகிறார்.
Samayam Tamil 2


தமிழக பாஜக தேசிய தலைவர் பதவி தற்போது காலியாக உள்ள நிலையில் அந்த இடத்தை ரஜினி நிரப்புவார் என ஆதாரமற்ற தகவல்கள் வெளியாயின. ஆனால் பாஜக சார்பில் இதற்கு ஆட்சேபனை எதுவும் இல்லாதவாறு கருத்துகள் வெளியாயின.

ரஜினியை எதுக்கு இழுக்குறீங்க.? அவர் முடிவு பண்ணட்டும்..!

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் எச். ராஜா, ரஜினி ஒரு நல்ல நண்பர் அவர் தமிழக பாஜக தேசிய தலைவரின் பதவிக்கு வருவதும், வராததும் அவரது சொந்த முடிவு. அவரே விருப்பம் எதுவும் தெரிவிக்காத நிலையில் நாம் அதை குறித்து பேச முடியாதென கூறினார்.

ஒருவேளை ரஜினி விருப்பத்தை தெரிவித்தால் பாஜக தலைமை அதை ஏற்கும் என்பது இதன்மூலம் தெளிவாகியது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து கழட்டி விடப்பட்ட கராத்தே தியாகராஜன், ரஜினி அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் கட்சியை துவங்குவார் என அறிவித்தார்.

காவி துண்டு அணிந்த பன்னீர் மகன் ரவீந்திரநாத்!!

இதன்மூலம் இவரது அரசியல் பயணம் ரஜினியின் கட்சியை நம்பி உள்ளதென தெரிந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன் நிச்சயம் கட்சி தொடங்கி விடுவேன் என்று ரஜினி என்னிடம் தெரிவித்திருந்தார் என கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு பின் கட்டாயம் ரஜினியின் கொடியே பறக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்மீக அரசியலை உருவாக்குவேன் என ரஜினி கூறியதையடுத்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் தீவிர தொண்டர்களாக மாறியுள்ளனர். தீவிர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது கராத்தே தியாகராஜன் பேசிவருவது ரஜினியின் அரசியல் வருகையை உற்றுநோக்கும் தொண்டர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

புவி வெப்பமயமாதல்… காலநிலை அவசர நிலையைப் பிரகடனம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

தர்பார் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினியின் கவனம் அரசியல் பக்கம் இன்னும் திரும்பவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவேளை படப்பிடிப்பு முடிந்து ரஜினி இமையமலைக்குச் செல்வார் எனவும் அதன்பின்னர் அரசியலுக்கு யூ டர்ன் கொடுப்பார் எனவும் பலரின் எதிர்பார்ப்பு.

அடுத்த செய்தி