ஆப்நகரம்

தமிழகத்தை தொற்றிய கர்நாடகா தீ!

தமிழகத்தை தொற்றிய கர்நாடகா தீ!

TNN 3 Mar 2017, 11:37 am
கோவை : சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஹாசனூர் வனத்தில் சுமார் 300 ஏக்கள் பரப்பளவில் காட்டுத்தீ பற்றியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய மரங்கள், அரிய வகை மூலிகைகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. தீயினால் உண்டான புகை சுமார் 5 கிமீ சுற்றளவிற்கு பரவியுள்ளது. புகையினால் சாலையில் எதிரே இருப்பவை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா வனப்பகுதியில் பற்றி தீ அங்கிருந்து ஹாசனூர் வனப்பகுதிக்கு பரவியுள்ளது. தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.
Samayam Tamil karnataka fire spreads to tamil nadu
தமிழகத்தை தொற்றிய கர்நாடகா தீ!


காட்டுக்கு உள்ளே இருக்கும் விலங்குகளின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் ஆனால் சிறு விலங்குகள், பூச்சிகள் தீயில் கருகி இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான பெரிய விலங்குகள் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு சென்றிருக்க வாயப்பிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த தீ விபத்தினால் சத்தியமங்கலம் – மைசூரு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும் எதிரே உள்ளவற்றை சரியாக பார்க்க முடியவில்லை என்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாக கூறுகின்றனர். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிரக் போன்ற அதிக வாகனங்கள் வரும் முக்கிய சாலை மைசூரு ஹைவே என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களால் முடிந்த அளவிற்கு தீ பரவுவதை தடுக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் கரபல்லம் பகுதிக்கு தீ பரவியதை அடுத்து வெகு விரைவாக ஹாசனூர் பகுதியிலும் தீப்பற்றி கொண்டது என ஹாசனூர் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி