ஆப்நகரம்

கர்நாடகாவில் யார் ஆட்சியமைத்தாலும் காவிரி நீர் வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்னீரை முறைப்படி கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 May 2018, 12:05 pm
ஈரோடு : கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்னீரை முறைப்படி கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dhinakaran


ஈரோட்டில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்க 3வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்கவிழா கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “பழனிச்சாமியை யார் முதல்வர் ஆக்கியது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆட்சி பொறுப்பில் உள்ள தங்கமணி, வேலுமணி ஆகியோர் அடுத்த தேர்தலில் டெப்பாசிட் இழப்பார்கள். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும்.

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக தரவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி