ஆப்நகரம்

குடகில் டிடிவி எம்.எல்.ஏக்கள்; தடுப்புச் சுவர் அமைத்த கர்நாடக போலீஸ்…!

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

TNN 16 Sep 2017, 1:00 pm
பெங்களூரு: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil karnataka police protects ttv mlas
குடகில் டிடிவி எம்.எல்.ஏக்கள்; தடுப்புச் சுவர் அமைத்த கர்நாடக போலீஸ்…!


ஈபிஎஸ் அணியில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏக்கள், டிடிவி தினகரன் அணியில் சேர்ந்து கொண்டனர். இதன் எண்ணிக்கையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில் எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க, முதலில் புதுச்சேரி சென்றனர். பின்னர் கர்நாடக மாநிலம் குடகுப் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

அவர்களை மீட்டுக் கொண்டு வர தமிழக போலீசார் அங்கு விரைந்தனர். இதுகுறித்து கர்நாடக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் டி.எஸ்.பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உள்ளிட்ட 28 போலீசார் அடங்குவர். இந்த விவகாரம் கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி, முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து விடுதி உரிமையாளர் விவரம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, டிடிவி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பை கர்நாடக போலீசார் வழங்கியுள்ளனர்.

Karnataka Police protects TTV MLAs.

அடுத்த செய்தி