ஆப்நகரம்

திடீரென லண்டன் புறப்பட்ட கார்த்தி சிதம்பரம்!

திடீரென லண்டன் புறப்பட்ட கார்த்தி சிதம்பரம்!

TOI Contributor 19 May 2017, 4:51 pm
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தனது நண்பர்களுடன் அவர் லண்டன் சென்றுள்ளார்.
Samayam Tamil karthi chidambaram left to london
திடீரென லண்டன் புறப்பட்ட கார்த்தி சிதம்பரம்!


முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்து 16ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. மும்பையின் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் சில நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதிபெற்ற கார்த்தி சிதம்பரம் அதனை மிகவும் குறைந்த தொகையாக கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இப்படியொரு பரபரப்பான சூழலில் கார்த்தி சிதம்பரம் தன் நண்பர்கள் சிலருடன் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணம் ஏற்கனவே திட்டமிட்டது தான் என்றும், லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 29ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்புவார் என்று அவரது வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி