ஆப்நகரம்

'அடிச்சி சொல்றேன், ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்' - கார்த்தி சிதம்பரம்

ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவுடன் சரணடையும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேச்சு

Samayam Tamil 25 Feb 2021, 8:54 pm
தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் தந்திரம் என்றும் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அதிமுக சசிகலாவிடம் சரணடையும் என்றும் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Samayam Tamil file pic


மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம் போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ''அதிமுக அரசு மனிதாபிமானம் அற்ற அரசு. துப்புரவு பணியாளர்களை வேலை நீக்கம் செய்ததை போல இவர்களுக்கும் செய்துள்ளது என கூறினார்.

தொடர்ந்து, புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு குறித்து கேட்டபோது, பாஜகவின் ஆட்சி இல்லாத இடங்களில் இப்படித்தான் நடக்கிறது. முதலில், கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகாவில் இப்படித்தான் செய்தார்கள். பாஜக தேர்தலில் தோலிவி அடைந்து விட்டால், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு பின்னர் ராஜினாமா செய்ய வைப்பது, பின்னர் ஆளுநர் மூலமாக ஆட்சியை கவிழ்த்து அங்கு குடியரசு ஆட்சியை கொண்டு வருவதுதான் பாஜகவின் தந்திரம். புதுச்சேரியிலும் அப்படிதான் நடந்துள்ளது.

9,10,11 மாணவர்கள் ஆல்பாஸ்: இருந்தாலும் ஸ்கூலுக்கு கிளம்புங்க - அமைச்சர் உறுதி

இப்படியான சூழலில் தமிழக ஆளுநரை துணைநிலை ஆளுநராக நியமிக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் பாஜக பொறுப்பில் இருந்து அரசியல் செய்து வந்தவரை கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்து இங்கு அமர்த்தியுள்ளார்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, தேர்தலுக்கு முன்னரோ அல்லது பிறகோ ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா உடன் சரணடையத்தான் போகிறது. அது நடக்கும்போது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து என்னை அழையுங்கள். இன்னும் சில வாரங்களில் தான் அதிமுக அமைச்சர்கள் பொறுப்பில் இருக்க போகிறார்கள். காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி