ஆப்நகரம்

ஆளுங்கட்சி பேனர் வைத்தால் சரியாதா? : கார்த்தி சிதம்பரம் கேள்வி

விளம்பர பேனர்களால் உயிர்கள் பறிபோவது தொடர்ந்த நிலையில், அண்மையில் பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்ற மாணவி உயிரிழந்ததையடுத்து பேனர்கள் வைக்க தடை விதித்திருந்தது நீதிமன்றம்.

Samayam Tamil 4 Oct 2019, 9:50 pm
தமிழகம் முழுவதும் இன்று ஆளும் அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. காரணம் பேனர்களால் ஏற்கனவே ஒரு இளம்பெண்னின் உயிரை எடுத்தும்,மீண்டும் பேனர் வைக்க அனுமதி கேட்டிருப்பதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதும் தான்.
Samayam Tamil karthi chidabaram


விளம்பர பேனர்களால் உயிர்கள் பறிபோவது தொடர்ந்த நிலையில், அண்மையில் பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்ற மாணவி உயிரிழந்ததையடுத்து பேனர்கள் வைக்க தடை விதித்திருந்தது நீதிமன்றம்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களை பேனர் வைக்கக்கூடாது என்று வலியுறுத்தவும் உத்தரவிட்டது.

சில கட்சிகள் அறிக்கை விட்டனர். சில கட்சிகள் அன்பாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவை துளியும் மதிக்காத அரசியல்வாதிகள் தொடர்ந்து ஆங்காங்கே பேனர்கள் வைத்துக்கொண்டே இருந்தனர்.

ஆனால், ஆளும் அதிமுக அரசு இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தங்கள் பேனர் விளம்பர வெறியை தீர்க்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்-கும் சந்திக்கப்போகும் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு , வரவேற்பு தெரிவிக்க பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

சட்ட திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு மட்டும்தானா? அரசு என்றால் என்ன வேண்டுமானால் செய்யலாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,

“அரசு தரப்பில் பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா என்றும், தமிழக அரசுக்கு பேனர் வைக்க அளிக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் விசித்திரமானது” என்றும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதைத்தாண்டி மக்களின் மனநிலையை பிரதிபலித்ததாகவே கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து பார்க்கபப்டுகிறது..

அடுத்த செய்தி