ஆப்நகரம்

சோஷியல் மீடியா பிரச்சாரத்திற்காக களமிறங்கும் தமிழக காங்கிரஸ் பிரமுகரின் மருமகள்!

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் பிரமுகரின் மருமகள், மறைமுக அரசியலில் களமிறங்க உள்ளார்.

TIMESOFINDIA.COM 6 Mar 2019, 2:45 pm
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அக்கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
Samayam Tamil Chidambaram.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் வீட்டில் இருந்து, புதிய நபர் ஒருவர் மக்களவை தேர்தல் களத்தில் களமிறங்க உள்ளார். அதுவும் நேரடியாக அல்லாமல், மறைமுக அரசியலில் என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரத்தின் மருமகளான ஸ்ரீநிதி, தனது கணவர் கார்த்தி சிதம்பரத்திற்காக சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்காக அதன் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். ஸ்ரீநிதி ஒரு மருத்துவர். மேலும் சிறப்பாக நாட்டியம் ஆடக்கூடியவர். இவர் அரசியலில் இருந்து தனித்து காணப்பட்டார். சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தனது மகனை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, 1,04,678 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீநிதி கலந்து கொண்டு பேசியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலருக்கு அவர் என்றே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் எப்படி பிரச்சாரம் மேற்கொள்வது என்று விளக்கியுள்ளார். தனது கட்சியினரை உறுப்பினர்களாக கொண்ட வாட்ஸ்-அப்பில் ஸ்ரீநிதி அட்மினாக இருக்கிறார். அவரிடம் இருந்து தினசரி அறிவுரைகள் பகிரப்பட்டு வருவதாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி