ஆப்நகரம்

தனி அன்பு கொண்டவர் சோ: கருணாநிதி நெகிழ்ச்சி

மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

TNN 7 Dec 2016, 1:13 pm
சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil karunanidhi condolence message to cho ramasamy
தனி அன்பு கொண்டவர் சோ: கருணாநிதி நெகிழ்ச்சி


கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 84. மறைந்த பத்திரிகையாளர் சோவின் உடலுக்கு தேசியக் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், சோ ராமசாமி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ- ராமசாமி அவர்கள் இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக் கிடையிலும் தன்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ என்றும், அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Karunanidhi condolence message to Cho Ramasamy

அடுத்த செய்தி