திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, அவரின் சட்டமன்றத் தொகுதியான திருவாரூர் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது. இதைத் தேர்தல் துறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ், உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடத்திட் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது. இதைத் தேர்தல் துறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ், உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடத்திட் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.