ஆப்நகரம்

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவா் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் தீவிரி சிகிச்சையின் அடிப்படையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2018, 8:40 pm
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவா் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் தீவிரி சிகிச்சையின் அடிப்படையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Karunanidhi Kannadi


தி.மு.க. தலைவா் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டது. வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவா்கள், தொண்டா்கள் நேரில் சந்திக்க வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்து சென்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மு.க.ஸ்டாலின், அழகிரி, துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் இரவு 10 மணியளவில் தங்கள் வீடுகளுக்கு திரும்பினா். பின்னா் சிறிது நேரத்திலேயே கருணாநிதியின் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து தி.மு.க. தலைவா்கள் அனைவரும் மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு வீட்டிற்கு வந்தனா். பின்னா் அவா் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.


மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடா் சிகிச்சையைத் தொடா்ந்து அவரது உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவமனை தொிவித்தது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை தொடா்ந்து சீரான நிலையில் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் அடிப்படையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து சிறந்த மருத்துவா்களை கொண்ட குழு கலைஞரின் உடல் நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி