ஆப்நகரம்

தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

TNN 17 Sep 2016, 10:23 am
சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil karunanidhi respects periyar
தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை


தந்தை பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.இராமசாமி கடந்த 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதியன்று ஈரோட்டில் பிற்றந்தார்.

எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.

தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய சமூக போராளி. சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார்.

இவரது 138-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

அடுத்த செய்தி