ஆப்நகரம்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் கருணாநிதி

தி.மு.க. தலைவா் கருணாநிதி ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றாா்.

Samayam Tamil 18 Jul 2018, 8:42 pm
தி.மு.க. தலைவா் கருணாநிதி ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றாா்.
Samayam Tamil Karunanidhi Kannadi


திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக தற்போது சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், அதற்குரிய சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, காவேரி மருத்துவமனையில், செயற்கை சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது. அவருக்கு உதவியாக பணிவிடையாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன் கிழமை) காலை காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு நான்காவது முறையாக டிரக்கியாஸ்டமி கருவி மாற்றிப் பொருத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாலையே அவா் மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினாா்.

அடுத்த செய்தி