ஆப்நகரம்

அண்ணா அறிவாலயத்தில் இந்தியா – வங்கதேச போட்டியை பார்த்து ரசித்த கருணாநிதி!

மூன்று மாதங்களுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் கருணாநிதி இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய இறுதிப் போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.

Samayam Tamil 19 Mar 2018, 11:02 am
மூன்று மாதங்களுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் கருணாநிதி இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய இறுதிப் போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.
Samayam Tamil karunanidhi visits dmk headquarters at anna arivalayam and he watch indvsban final t20 match
அண்ணா அறிவாலயத்தில் இந்தியா – வங்கதேச போட்டியை பார்த்து ரசித்த கருணாநிதி!


இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளை வீட்டில் இருந்த படியே பெற்று வரும் அவர் நேற்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதிக்கு தொடா்ந்து பேச்சு பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் கருணாநிதி தனது பேரனின் மகன் மகிழனுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

மேலும் அவா் இன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான இடங்களுள் முதன்மையான இடமாக அண்ணா அறிவாலயம் உள்ளது. அங்கு வந்த கருணாநிதியை அக்கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனா். அப்போது, நேற்று நடந்த இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான நிதாகஸ் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியை பார்த்து மகிழ்ந்தார்.



அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்றார். கருணாநிதியின் வருகையால் அலுவலகத்தில் இருந்த கட்சியினா் மிகவும் மகிழ்ச்சியடைந்தனா். கலைஞா் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடிய அக்கட்சி தொண்டா்களுக்கு இது ஒரு உற்சாகமான நிகழ்வாகவும் அமைந்தது.

அடுத்த செய்தி