தி.மு.க. தலைவா் கருணாநிதி தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்த வரலாற்றுப் பயணத்தை இந்த பதிவில் பாா்க்கலாம். 1937ல் ஆட்சியில் இருந்த ராஜாஜி அரசு, அரசுப்பள்ளிகளில் இந்தி படிப்பைக் கட்டாயமாக்கியது. அதனைக் கண்டித்து அப்போதைய பிரதான எதிா்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சி தொடா் போராட்டங்களை முன்னெடுத்தது. 12 வயதிலேதுயே கருணாநிதி இந்த போராட்டங்களால் ஈா்க்கப்பட்டாா். முதல் கட்டமாக இளைஞா் மறுமலா்ச்சி அமைப்பு என்ற இயக்கத்தை கருணாநிதி தொடங்கினாா். இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் மாணவா்களை திரட்ட சிறு வயதிலேயே மாணவ நேசன் என்ற கையெழுத்து பத்திாிகையை நடத்தினா்ா.
தொடா்ந்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கருணாநிதி 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முரசொலி பத்திரிகையை தொடங்கினாா். ஆரம்ப கட்டத்தில் வார பத்திாிகையாக வெளி வந்த நிலையில் 1960ம் ஆண்டு முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.
கலைஞர் கருணாநிதியின் சினிமா பயணம்- சிறப்புத் தொகுப்பு
1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும் கருணாநிதி வெற்றி பெற்றாா். 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் இக்காலக்கட்டத்தில் தான் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது தமிழகத்தில்தான்.
1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அண்ணாவின் மறைவையடுத்து, அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும் கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தந்தை பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை முதல்வராக பொறுப்பேற்க செய்தார். அதே ஆண்டில் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின். தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது: அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்!
1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய காலக்கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகும்.
கருணாநிதியை பார்ப்பதற்கு கோபாலபுரம் இல்லத்தில் குவிந்த தொண்டர்கள்!
1983-ல் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பரில் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி!
தொடா்ந்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கருணாநிதி 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முரசொலி பத்திரிகையை தொடங்கினாா். ஆரம்ப கட்டத்தில் வார பத்திாிகையாக வெளி வந்த நிலையில் 1960ம் ஆண்டு முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.
கலைஞர் கருணாநிதியின் சினிமா பயணம்- சிறப்புத் தொகுப்பு
1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும் கருணாநிதி வெற்றி பெற்றாா். 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் இக்காலக்கட்டத்தில் தான் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது தமிழகத்தில்தான்.
1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அண்ணாவின் மறைவையடுத்து, அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும் கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தந்தை பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை முதல்வராக பொறுப்பேற்க செய்தார். அதே ஆண்டில் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின். தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது: அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்!
1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய காலக்கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகும்.
கருணாநிதியை பார்ப்பதற்கு கோபாலபுரம் இல்லத்தில் குவிந்த தொண்டர்கள்!
1983-ல் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பரில் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி!