ஆப்நகரம்

சசிகலாவை சந்திக்க காத்திருக்கும் கருணாஸ்

சசிகலா மற்றவர்களைச் சந்திக்க தடை உள்ள நிலையில் கருணாஸ் அவரை சந்திக்க காத்திருக்கிறார்.

TNN 7 Oct 2017, 4:21 pm
சசிகலா மற்றவர்களைச் சந்திக்க தடை உள்ள நிலையில் கருணாஸ் அவரை சந்திக்க காத்திருக்கிறார்.
Samayam Tamil karunas waits to meet sasikala
சசிகலாவை சந்திக்க காத்திருக்கும் கருணாஸ்


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா நேற்று 5 நாள் பரோலில் வெளியே வந்திருக்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கும் அவரது கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு பேட்டி அளிக்கவும் அரசியல் ரீதியான சந்திப்புகள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளியான இளவரசியின் மகள் வீட்டில் அவர் தங்குகிறார்.

இந்நிலையில், சசிகலாவை சந்திக்க நடிகரும் எம்எல்ஏவும் ஆன கருணாஸ் இளவரசி மகள் வீட்டின் முன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவுடன் பேசி அதிமுகவில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா பிறரைச் சந்திப்பதற்குத்தான் கர்நாடக சிறைத்துறை தடை விதித்துள்ளது என்பதால் பிறர் அவரைச் சென்று சந்திப்பதில் சட்டச்சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி