ஆப்நகரம்

திருமணம் முடித்து மாட்டு வண்டியில் நகர் உலா வந்த புதுமணத் தம்பதிகள்..!!

கன்னியாகுமரி: கருங்கல் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சில் கலந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 25 Jan 2019, 9:36 am
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கருங்கல் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து வீடு திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மாட்டு வண்டியில் நகர் உலா வந்த புதுமணத் தம்பதிகள்..!!


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த பொன் ஷோஜின் ராஜ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆசிரியை பெனிட்டா என்பவருக்கும் திக்கணங்கோடு சிஎஸ்ஐ தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

அதை தொடர்ந்து கருமாவிளை பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக புதுமணத் தம்பதிகள் புறப்பட்டனர். அப்போது தம்பதிகள் இருவரும் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். இது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அப்போது இதுகுறித்து பேசிய மணமகனின் தந்தை ராஜா, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனால் விரைவில் பழங்கால முறை போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதை பொதுமக்களுக்கு உணர்த்தவே புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்றதாக கூறினார்.

இந்த மணமகனின் தந்தை ராஜா, மாவட்ட காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி